Connect with us

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரலாற்று சாதனை படைத்தார் மனு பாக்கர்..!!

Featured

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரலாற்று சாதனை படைத்தார் மனு பாக்கர்..!!

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான மனு பாக்கர் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெறுகிறது.

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் விளையாட்டு வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடரில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார் .

இதையடுத்து இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாகர் – ஷரோஜோத் சிங் இணை பங்கேற்றது. வெண்கல பதக்கத்துக்கான இந்த போட்டியில் கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டதில், 16-10 என முன்னிலை பெற்று மனு பாகர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது.

இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாகர் படைத்துள்ளார். மேலும் பி.வி.சிந்துவுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மனு பாகர் பெற்றிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Featured

To Top