Connect with us

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 கோடி நிதியுதவி – ராணுவ உடையில் களப்பணியில் இறங்கிய மோகன்லால்..!!

Cinema News

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 கோடி நிதியுதவி – ராணுவ உடையில் களப்பணியில் இறங்கிய மோகன்லால்..!!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 3 கோடி நிதியுதவி வழங்கியுள்ள நடிகர் மோகன்லால் . முண்டக்கையில் சேதமடைந்த பள்ளியை கட்டித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில் வயநாட்டில் சேதமடைந்த பகுதிகளை ராணுவ உடையணிந்து நேரில் சென்று பார்வையிட்ட நடிகர் மோகன்லால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி வயநாடு அருகே உள்ள முண்டக்கையில் சேதமடைந்த பள்ளியை கட்டித்தருவதாகவும் நடிகர் மோகன்லால் உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top