Connect with us

3வது ஒருநாள் போட்டி : பேட்டிங்கில் மிரட்டிப்பார்த்த இலங்கை அணி – இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்கு..!!

Featured

3வது ஒருநாள் போட்டி : பேட்டிங்கில் மிரட்டிப்பார்த்த இலங்கை அணி – இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்கு..!!

இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணிக்கு 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்க மற்றும் பெர்னாண்டோ களமிறங்கினர். அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர் . இதில் சிறப்பாக விளையாடிய நிசாங்க 45 ரன்களில் வெளியேற மறுமுனையில் விளையாடி வந்த பெர்னாண்டோவும் 96 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த மெண்டிஸ் 59 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது . இறுதியில் 50 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 248 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போதைப் பொருள் கடத்தலுக்கு துணைப்போகும் அரசு அதிகாரிகள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

More in Featured

To Top