Connect with us

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது – காவல் ஆணையர் அருண்

Featured

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது – காவல் ஆணையர் அருண்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

சென்னையை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அருண் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் ரவுடிகளுக்கு எதிராக பல அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் அருண் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் இந்த வழக்கில் 90% வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்த வழக்கில் 3 முக்கிய ரவுடிகள் பிடிபடவில்லை சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்; விரைவில் கைதாவார்கள் ; ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Featured

To Top