Connect with us

தமிழில் ஒரு தரமான படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு – வாழை படத்தை தாறுமாறாக புகழ்ந்த ரஜினிகாந்த்..!!

Cinema News

தமிழில் ஒரு தரமான படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு – வாழை படத்தை தாறுமாறாக புகழ்ந்த ரஜினிகாந்த்..!!

மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் அறிக்கை மூலம் பதிவு செய்துள்ளார்.

வாழை படம் பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது :

மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு

மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்.

மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் என நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தும் அனிருத் - வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top