Connect with us

அதிரடி சதம் விளாசிய அபிஷேக் சர்மா – ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு..!!

Featured

அதிரடி சதம் விளாசிய அபிஷேக் சர்மா – ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் 2 வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

இதில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் இந்த முறையும் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து அபிஷேக் ஷர்மாவுடன் கைகோர்த்த ருதுராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் அபிஷேக் அரைசதம் கடந்து அசத்த மறுபக்கம் விளையாடிய ருதுராஜும் தனது அரைத்சத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் சதம் விளாசி தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த ரிங்கு வந்த வேகத்தில் அதிரடி காட்டி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 234 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Featured

To Top