Connect with us

சினிமாவில் இனி நடிக்கவே மாட்டேன் – வேதனையுடன் ட்வீட் போட்ட நடிகர் பாலாஜி முருகதாஸ்..!!

Cinema News

சினிமாவில் இனி நடிக்கவே மாட்டேன் – வேதனையுடன் ட்வீட் போட்ட நடிகர் பாலாஜி முருகதாஸ்..!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வரும் நடிகர் பாலாஜி முருகதாஸ் மிகவும் வேதனையுடன் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ஷோ பிக் பாஸ்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இன்று திரைத்துறையில் ஜொலித்து வருகின்றனர் .

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் தான் பாலாஜி முருகதாஸ்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த அமோக வரவேற்பை இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது . அதன்படி வா வரலாம் வா, சபாநாயகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பாலாஜி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நடிகர் பாலாஜி முருகதாஸ் வேதனையுடன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அந்த டீவீட்டில் அவர் கூறிருப்பதாவது :

’ஃபயர்’ என்ற திரைப்படத்தில் நடித்தேன். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. ஆனால் இந்த படத்தில் நான் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் வழங்கவில்லை.

இதன்காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன்’ . இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன். இனி வேற வேலையை பார்க்கப் போகிறேன் என பாலாஜி முருகதாஸ் கூறியுள்ளார்.

கவலையுடன் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top