Connect with us

“துயர்மிகு நேரத்தில் கைக்கொடுப்போம்” வயநாடு மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி..!!

Cinema News

“துயர்மிகு நேரத்தில் கைக்கொடுப்போம்” வயநாடு மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வயநாடு அருகே கடந்த 3 நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு உலக மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - வெளியான ஷாக்கிங் தகவல்..!!

More in Cinema News

To Top