Connect with us

“திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு” – கைதி 2 அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

Cinema News

“திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு” – கைதி 2 அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

ரசிகர்களின் எதிர்பார்ப்பு பட்டியலில் முதல் 10 இடத்தில இருக்கும் கைதி 2 படம் குறித்த சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை நடிகர் கார்த்தி ஓப்பனாக கொடுத்துள்ளார்.

இன்று தமிழ் சினிமாவின் சென்சேஷனல் டைரக்டராக வலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான திரைப்படம் கைதி . சத்தமின்றி திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகவும் சத்தமாக தனது வெற்றியை பதிவு செய்தது .

கார்த்தி,தீனா,நரேன் உளப்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நாயககியே இல்லாமல் இருந்தது பல சிங்கில்ஸ்களுக்கு ஆறுதலாக இருந்தது மட்டுமல்லாமல் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் நாயகி உள்ளம் இந்த படம் வெற்றியடையும் என நம்பிக்கையை ஊட்டியது .

அதற்கேற்றாற் போல் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் நிச்சயம் வரும் என லோகேஷ் மற்றும் கார்த்தி முன்பே தெரிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை நடிகர் கார்த்தி ஓப்பனாக கொடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு கலகலப்பாக பேசிய கார்த்தி தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியுள்ளார் :

“தற்போது 2 படம் முடிச்சுட்டோம். இந்த வருடமே இரண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிடும். சர்தார்-2 ஆரம்பிக்கப் போறோம். அடுத்த வருடம் லோகேஷ் கனகராஜ் வர சொல்லிட்டாரு. திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு” என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை தான் இயக்கப் போகிறார் என்பது கார்த்தியின் அப்டேட் மூலம் தெளிவாக தெரிந்துவிட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

More in Cinema News

To Top