Connect with us

தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் மகேஷ் பாபு நிதியுதவி..!!

Cinema News

தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் மகேஷ் பாபு நிதியுதவி..!!

தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அம்மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் மகேஷ் பாபு நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித்தீர்த்தது . இரு மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து அங்குள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளித்தது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிவரான பணிக்காக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் மகேஷ் பாபு நிதியுதவி வழங்கியுள்ளார்.

தெலங்கானாவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அம்மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் மகேஷ் பாபு 50 லட்சம் வழங்கியுள்ளார் மேலும் AMB சினிமாஸ் சார்பாக கூடுதலாக 10 லட்சமும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Cinema News

To Top