Connect with us

“3 பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்த நடிகர் மன்சூர் அலிகான்! இன்னும் முடியலயா இந்த பிரச்சனை..!”

Cinema News

“3 பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்த நடிகர் மன்சூர் அலிகான்! இன்னும் முடியலயா இந்த பிரச்சனை..!”

நடிகை த்ரிஷா உட்பட 3 பிரபலங்கள் மீது நடிகர் மன்சூர் அலிகான் ரூபாய் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் பேசிய போது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு ஒன்றை செய்தார். இதற்கு ’இது மாதிரி மனிதர்கள் மனிதர் குலத்துக்கு அவமானம்’ என்று த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உட்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் படி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் ’ என்று த்ரிஷா காவல்துறையினர்களிடம் கூறியிருந்த நிலையில் திடீரென த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் கணக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top