Connect with us

அடுத்த எஸ்.கே வந்தாச்சு : மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

அடுத்த எஸ்.கே வந்தாச்சு : மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

பிரபல திரைப்பட நடிகரான சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் தயாரிப்பாளர் , பாடல் ஆசிரியர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவரது நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் எஸ்.கே நடித்து வருகிறார்.

ஒருபக்கம் நடிகராக கலக்கி வந்தாலும் மறுபக்கம் பொறுப்பான குடும்ப தலைவனாகவும் எஸ்.கே இருந்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி என நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top