Connect with us

‘கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

‘கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா – என்ன சொன்னார் தெரியுமா..?

‘கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க பேசியது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே கங்குவா .

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளது தற்போது வைரலாக வலம் வருகிறது.

எனது படம் திரையரங்கில் வெளியாகி 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இருந்தபோதும் ‘சூர்யா S/o கிருஷ்ணன்’ படத்தின் ரீரிலீஸை நீங்கள் கொண்டாடினீர்கள். உங்கள் அன்பை பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்தது. இதை நான் ரத்த சொந்தமாகவே பார்க்கிறேன். இந்த பிணைப்பு எனக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும் - நடிகர் கமல்ஹாசன் காரசார பதிவு..!!

More in Cinema News

To Top