Connect with us

விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான ஒருவரைக்கூட விடக்கூடாது – நடிகர் விஷால் வேண்டுகோள்

vishal kallakurichi

Cinema News

விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான ஒருவரைக்கூட விடக்கூடாது – நடிகர் விஷால் வேண்டுகோள்

விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு தக்க நடவடிக்கை எடுத்து நீதியின் முன் நிறுத்த வேண்டம் என தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.”

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன் என நடிகர் விஷால் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர சம்பவத்தில் பலர் பலியாகி இருந்தாலும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களை காண அரசியல் தலைவர்கள் படையெடுத்துள்ள நிலையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top