Connect with us

திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பாவனா – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பாவனா – என்ன சொன்னார் தெரியுமா..?

பிரபல தென்னிந்திய நடிகை பாவனா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா .

தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த கொடுமையால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்தார்.

அப்போது பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நீண்ட நெடு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கலைத்துறையில் கலக்க களமிறங்கியுள்ளார் நடிகை பாவனா .

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் குறித்து நடிகை பாவனா மனம் திறந்து பேசியுள்ளார் .

திருமணத்திற்கு பிறகு நடிகையின் இலக்கு மாறிவிடும் என்று பேசப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. திறமையும், செயல்பாடும் திருமணத்திற்கு பிறகு மாற்றம் கொடுக்காது.

எனது திரைவாழ்க்கையில் எனது திருமணம் எப்போதும் இடையூறாக இருந்தது இல்லை சொல்லப்போனால் திருமணத்திற்கு பின்பு தான நான் இன்னும் சினிமாவில் கவனம் செலுத்துகிறேன் என நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top