Connect with us

வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு – படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Cinema News

வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு – படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

வளையம் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அப்படத்தில் கதையின் நாயகியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கமுட்டை, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் .

தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாள என பல மொழி படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக ஹிதியிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் வளையம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ளார் .

அறிமுக இயக்குநர் மனோபாரதி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் .


இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கடைசி உலகப் போர்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

More in Cinema News

To Top