Connect with us

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு வந்த சோதனை – கோர்ட்டு வரை சென்ற விவகாரம்..!!

Cinema News

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு வந்த சோதனை – கோர்ட்டு வரை சென்ற விவகாரம்..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளதாகவும் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்று முற்றி நிற்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . தமிழ் மட்டுமின்றி பல மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படமே அஜயந்தே ரண்டம் மோஷனம்

மலையாள படமான இப்படத்தை ஜித்தின் லால் இயக்க டொவினோ தாமஸ் கதையின் நாயகனாக நடித்துள்ளார் . இந்நிலையில் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் தற்போது படக்குழு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது .

எர்ணாகுளத்தை சேர்ந்த மருத்துவரான வினித் என்பவர் இந்த படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ. 3.20 கோடி பெற்று தன்னை ஏமாற்றியுள்ளனர் . இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார் .

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. படக்குழுவுக்கு வந்த்துள்ள இந்த சோதனை முடிந்து இந்த படம் திரைக்கு வருமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top