Connect with us

ஜல்லிக்கட்டில் வென்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடுக – இயக்குநர் அமீர் வேண்டுகோள்

Cinema News

ஜல்லிக்கட்டில் வென்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடுக – இயக்குநர் அமீர் வேண்டுகோள்

உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் அமீர் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் அமீர் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழின் தலைநகரம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்ற மைதானம் ஒன்றை தங்கள் கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

நேற்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த தினங்களில் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என இயக்குநர் அமீர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்..? வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top