Connect with us

உலகின் 8வது அதிசயமாக பும்ராவை அறிவிக்க வேண்டும் – விராட் கோலி புகழாரம்..!!!

Featured

உலகின் 8வது அதிசயமாக பும்ராவை அறிவிக்க வேண்டும் – விராட் கோலி புகழாரம்..!!!

உலகின் 8வது அதிசயமாக பும்ராவை அறிவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேசியிருப்பது தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டு இந்திய வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகிறது .

இந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது . இதையடுத்து மும்பையில் உள்ள முக்கிய வீதிகளில் ரசிகர்கள் வெள்ளத்தில் உலகக்கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலம் வந்தனர்.

இதையடுத்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியதாவது :

உலகின் 8வது அதிசயமாக பும்ராவை அறிவிக்க வேண்டும் என்ற மனுவில் நான் முதலில் கையெழுத்திட போகிறேன். அவர் ஒரு தலைமுறைக்கான பௌலர் . ஆட்டத்தின் போக்கை மாற்றியக்கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது . அவரை மீண்டும் மீண்டும் பாராட்ட தோன்றுகிறது .

டி20 உலக கோப்பை தொடரில், நான் நினைத்த அளவிற்கு பங்காற்றவில்லை என ராகுல் டிராவிட்-இடம் கூற, ‘உனக்கான நேரம் வரும்போது நீ FORM-க்கு வருவாய் என அவர் என்னை தேற்றினார்.

இறுதிப்போட்டியன்று கூட, ‘சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை’ என ரோஹித்திடம் சொன்னேன். ஆனால் அன்று, முதல் 4 பந்துகளில் 3 Four விளாசினேன். அப்போது ரோஹித்திடம் சென்று.’என்ன போட்டி இது. ஒரு சில நாளில் ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை மற்றொரு நாளில் எல்லாமே சிறப்பாக நடக்கிறதே எனக் கூறினேன் என விராட் கோலி சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேவாரா படத்தின் 3 வது பாடல் வெளியானது..!!

More in Featured

To Top