Connect with us

நெல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் – குவியும் பாராட்டுக்கள்..!!

Cinema News

நெல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் – குவியும் பாராட்டுக்கள்..!!

வரலாறு காணாத பேரிடரில் சிக்கி தவிக்கும் தென் தமிழக மக்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ள நிலையில் தற்போது திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளார்.

சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் வரலாறு காணாத பேரிடரில் சிக்கி தவிக்கும் தென் தமிழக மக்களை துரிதமாக செயல்பட்டு துயரில் இருந்து தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று அவரே களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜூம் இணைந்து தற்போது களப்பணிகளை மேற்கொண்டு வருவது மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்திக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன தெரியும்..? - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top