Connect with us

“நான் பெற விரும்புவது என்னுடைய உரிமையை..! இயக்குனர் அமீர் வெளியிட்ட திடீர் அறிக்கை!”

Cinema News

“நான் பெற விரும்புவது என்னுடைய உரிமையை..! இயக்குனர் அமீர் வெளியிட்ட திடீர் அறிக்கை!”

அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் தமிழின் கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம் பருத்திவீரன் படத்தால் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்த சர்ச்சை கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பருத்திவீரன் ரிலீஸின் போது தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் சிவசக்தி பாண்டியன், இந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், சிவகுமார் தான் பருத்திவீரன் படத்தை அமீரிடம் இருந்து வாங்க வேண்டாம் என சொன்னதாகக் கூறியிருந்தார். இதுபோல மேலும் பல தகவல்களையும் சிவசக்தி பாண்டியன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சிவசக்தி பாண்டியனுக்கு திறந்த மடல் மூலம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார் இயக்குநர் அமீர். “வணக்கம். நான் இயக்குநர் அமீர்..” எனத் தொடங்கும் இந்தக் கடிதத்தில் “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அமைதி காத்துவந்த இயக்குநர் அமீர் தற்போது நீண்ட விளக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பருத்திவீரன் சர்ச்சை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top