Connect with us

“ஜவான் படத்துல நடக்காதது இப்போ நடந்திடும் போல..! இயக்குனர் அட்லீ சொன்ன விஷயம்!”

Cinema News

“ஜவான் படத்துல நடக்காதது இப்போ நடந்திடும் போல..! இயக்குனர் அட்லீ சொன்ன விஷயம்!”

தமிழிலிருந்து ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கி வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் அவரிசையில் அட்லீயும் இணைவரா என்ற எதிர்பார்ப்பு ஜவான் படத்தில் இருந்தது. ஷாருக்கானுடன் நயன் தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களையும் இங்கிருந்தே அழைத்து சென்றிருந்தார் அட்லீ.

படத்துக்கு தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக இது பல படங்களின் மூவி மிக்சர் என்ற விமர்சனம் எழுந்தது. அதேசமயம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அட்லீயின் மேக்கிங்கும், அவர் தொட்டிருந்த கதைக்களமும் பாலிவுட்டுக்கு புதிது என்பதால் அந்த வரவேற்பு கிடைத்ததாக ரசிகர்கள் கூறினர். வசூலிலும் 1000 கோடி ரூபாயை தொட்டது ஜவான்.

இதற்கிடையே ஜவான் படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் சென்னையில் நடந்தது. அப்போது விஜய் ஜவான் செட்டுக்கு நேரில் சென்று ஷாருக்கானை சந்தித்தார். எனவே அந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்று அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தில் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் இருவரும் இணையும் படத்தை இயக்குவேன் என ரிலீஸுக்கு பிறகு அட்லீ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்லீ அவ்வாறு பேட்டியில் சொல்லியதை அடுத்து இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது. இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற அட்லீயிடம் விஜய், ஷாருக் இணையும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆமாம். அந்தப் படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இரண்டு பேரும் இணையும் படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை - நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு..!!

More in Cinema News

To Top