Connect with us

இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் – பக்குவமாக பாராட்டிய நடிகர் கார்த்தி..!!

Cinema News

இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் – பக்குவமாக பாராட்டிய நடிகர் கார்த்தி..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை இன்று பார்த்த நடிகர் கார்த்தி படத்தையும் மாரி செல்வராஜையும் பக்குவமாக பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் .இப்படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வாழை .

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினருக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது.

இந்நிலையில் மாரி செல்வராஜின் அழைப்பை ஏற்று வாழை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் கார்த்தி இப்படம் குறித்தும் மாரி செல்வராஜின் அழுத்தமான ஆழமான காயங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி போட்டுள்ள அந்த பதிவில் கூறிருப்பதாவது :

நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார்.

நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top