Connect with us

சரத்குமார் நடித்த ‘மாயி’ பட இயக்குநர் மறைவு – உருக்கமான இரங்கல் தெரிவித்த சரத்குமார்

Cinema News

சரத்குமார் நடித்த ‘மாயி’ பட இயக்குநர் மறைவு – உருக்கமான இரங்கல் தெரிவித்த சரத்குமார்

நடிகர் சரத்குமார் நடித்த மாயி படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என நடிகர் சரத்குமார் மிகவும் உருக்கமாக தனது இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top