Connect with us

மது அருந்த பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவலர் தந்தை – ஆந்திராவில் நடந்த பகீர் சம்பவம்

Featured

மது அருந்த பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவலர் தந்தை – ஆந்திராவில் நடந்த பகீர் சம்பவம்

ஆந்திராவில் மது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்த மகனை காவலர் தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பாக்கிய நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வரும் இவருக்கு சேஷக்குமார் என்ற மகன் உள்ளார்.

சேஷக்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது . இந்நிலையில் சம்பவத்தன்று பிரசாத் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமித்து வைத்துள்ள குடோனில் பாதுகாப்பு பணியில் உள்ளார்.

அப்போது இரவு நேரத்தில் பணியில் இருந்த தந்தையை தேடி வந்த மகன் சேஷக்குமார் தந்தையிடம் குடிக்க பணம் தருமப்படி கேட்டு தொல்லை செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பிரசாத் சேஷக்குமாருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாத் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சேஷக்குமார் மார்பில் சுட்டுள்ளார் .

துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த பிற காவலர்கள் சேஷக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து பிரசாத்தை கைது செய்த போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனை கோபத்தில் தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழில் ஒரு தரமான படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு - வாழை படத்தை தாறுமாறாக புகழ்ந்த ரஜினிகாந்த்..!!

More in Featured

To Top