Connect with us

வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை – நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு..!!

Cinema News

வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை – நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு..!!

வந்தே பாரத் ரயிலின் உணவு தரம் குறித்து பொதுமக்கள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த டீன்ஸ் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தனது அடுத்த கட்ட படத்தின் வேளைகளில் பார்த்திபன் தீவிரமாக இறங்கி உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பார்த்திபன் ரயிலில் வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென… என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை மாநகராட்சியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வாருங்கள் - இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top