Connect with us

இன்னும் எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவீங்க..? செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அருள்நிதி கலக்கல் பேச்சு..!!

Cinema News

இன்னும் எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவீங்க..? செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அருள்நிதி கலக்கல் பேச்சு..!!

‘டிமாண்டி காலனி2’ ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஹீரோ அருள் நிதி செய்தியாளர் சந்திப்பில் அரசியல் குறித்து பேசியுள்ளது காட்டித்தீபோல் பரவி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் தரமாக உருவாகி உள்ள திரைப்படமே ‘டிமாண்டி காலனி2’ .

ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் அருள் நீதியுடன் சேர்ந்து அருண் பாண்டியன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால் இப்படத்தின் 2 பாகம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது பிஸியாக இருக்கும் நிலையில் கோவையில் இன்று இப்படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது .

இந்த ப்ரோமோஷனில் இன்று கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருள்நிதி கூறியதாவது :

டிமாண்டி காலனி முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பாகம் நல்ல வரவேற்பை பெறும். படத்தில் கிராஃபிக்ஸ் நன்றாக வந்துள்ளது. எனக்கு முதல் பாகம் திரை வாழ்வில் திருப்புனையாக அமைந்தது.

2026இல் அரசியல் வருகை குறித்த செய்தியாளர் கெட கேள்விக்கு பதிலளித்த உதயநிதி கூறியதாவது :

2026இல் எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவீர்கள். அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். நான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நடிகர் அருள் நிதி நகைப்புடன் பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top