Connect with us

பேட்டிங்கில் மிரட்டிய இந்திய அணி – இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் மிரட்டிய இந்திய அணி – இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு..!!

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கை அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது .

இதில் இன்று நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் களமிறங்கினர் . அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இருவரும் தலா 40 ரன்கள் எட்டிய நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் சூரியகுமார் அரைசதம் கடந்த நிலையில் வெளியேற அடுத்த வந்த பண்டும் 49 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 213 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் - ஈபிஎஸ் விளாசல்..!!

More in Featured

To Top