Connect with us

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

Cinema News

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபால் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு கெத்தாக முன்னேறியுள்ளது .

மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சர்வேதேச கிரிக்கெட் கவுசில் ஏராளமான தொடர்களை நடத்தி வரும் நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய – நேபால் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் நேபால் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 178 ரன்கள் குவித்தது . இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 81 ரன்களும் ஹேமலதா 47 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதிக்கு கெத்தாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top