Connect with us

துயரமான சம்பவத்தை காட்ட தனி தைரியம் வேண்டும் – மாரி செல்வராஜின் வாழை படத்தை பாராட்டிய சுதா கொங்கரா..!!

Cinema News

துயரமான சம்பவத்தை காட்ட தனி தைரியம் வேண்டும் – மாரி செல்வராஜின் வாழை படத்தை பாராட்டிய சுதா கொங்கரா..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் வாழை திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா மனதார பாராட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவில் உணர்ச்சிகர இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படமே வாழை .

தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரசிகர்களை தாண்டி திரை பிரபலங்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது வாழை படத்தை இயக்குநர் சுதா கொங்கரா மனதார பாராட்டி உள்ளார்; இதுகுறித்து சுதா கொங்கரா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

இது போன்ற ஒரு அற்புதமான படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு என்னுடைய பாராட்டுகள். தன் வாழ்க்கையில் நடந்த துயரமான சோகமான சம்பவத்தை திரையில் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்ட கண்டிப்பாக தைரியம் வேண்டும். அந்த தைரியம் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுக்கு மட்டும் தான் உண்டு என சுதா கொங்கரா பாராட்டியுள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெளியான 5 நாட்களில் தளபதியின் GOAT திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..!!

More in Cinema News

To Top