Connect with us

“இயக்குனர் அமீருக்கு ஆதரவாக துணை நிற்கும் நடிகர் சசிக்குமார் வெளியிட்ட வைரல் போஸ்ட்!”

Cinema News

“இயக்குனர் அமீருக்கு ஆதரவாக துணை நிற்கும் நடிகர் சசிக்குமார் வெளியிட்ட வைரல் போஸ்ட்!”

கார்த்தி – பிரியாமணி நடிப்பில் 2007இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பருத்தி வீரன். இந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் அமீர் மீது, பருத்திவீரன் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு நீண்ட விளக்கமளித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அமீரின் நண்பரும், அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் இயக்குநர், நடிகராக மாறிய சசிக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் இயக்குநர் அமீருக்கு ஆதரவு அளித்துள்ளார். சசிக்குமார் தனது பதிவில், “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற கார்த்தியின் ஜப்பான் பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “பருத்திவீரன் படத்தால் ரூ. 2 கோடி நஷ்டம் அடைந்ததாகவும், சிவக்குமார் குடும்பத்தினருடன் நல்ல நட்பு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதனை கெடுத்துவிட்டார் என கூறினார். இதைத்தொடர்ந்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் அமீர் தனது சினிமா வாழ்க்கையில் பருத்திவீரன் படத்தால் சந்தித்த பிரச்னைகளை விரிவாக பேசியிருந்தார்.

அமரீன் பேச்சு வைரலான நிலையில், அவரது பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து பதிலடியும் தரப்பட்டது. அதில், அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை போலவே இன்னும் சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் பேட்டி அளித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கை மிரட்ட வரும் கங்குவா - புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top