Connect with us

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்க போகிறது என்பது தெரியும் – பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

Featured

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்க போகிறது என்பது தெரியும் – பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக கட்சி எங்கே இருக்க போகிறது என்பது தெரிய வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :

தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் கூட இங்கு இரு பெரும் தலைவர்கள் தமிழ் மண்ணில் இருக்கின்றார்கள். தேர்தல் தொடங்கியதும் தமிழகத்தில் தான். தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கு என்பது அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக கட்சி எங்கே இருக்க போகிறது என்பது தெரியும். அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும் . ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் எங்கே இருக்க போறீங்க. நான் எங்கே இருக்க போகிறேன் என்பது தெரியும்.

எந்த கட்சி தமிழகத்தில் மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. எந்த கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று பார்க்கத்தான் போகிறோம்.

மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்று நம்புகிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம். எங்களுடைய வெற்றி என்பது தனிப்பட்ட மனிதனுடைய வெற்றி கிடையாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

More in Featured

To Top