Connect with us

சாதி ரீதியான வேறுபாட்டை நான் வேடிக்கை பார்த்தவன் – ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன் டாக்..!!

Cinema News

சாதி ரீதியான வேறுபாட்டை நான் வேடிக்கை பார்த்தவன் – ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன் டாக்..!!

ஹரிஷ் மற்றும் தினேஷ் நடிப்பில் உருவான ‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சாதி குறித்து அப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓப்பனாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் TSK , பாலசரவணன் தேவதர்ஷினி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திறையர்னகுளில் வெளியான இப்படம் தற்போது பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது :

நான் என்ன நினைத்து இந்த படத்தை இயக்கினேனோ அதை விட படம் பிரமாதமாக வந்துள்ளனது . எங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .

படத்தில் நடித்த அனைவர்க்கும் இப்படம் மறக்க முடியாத படமாகவும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

சாதி ரீதியான வேறுபாட்டை நான் வேடிக்கை பார்த்தவன். ‘லப்பர் பந்து’ படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் நான் பார்த்தவை.

இயக்குநர்கள் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதி வேறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்ற கருத்து அழுத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும். அவர்களது படைப்புக்கு நாம் அதிக மதிப்பளிக்க வேண்டும் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிநடை போடும் ஜீவாவின் Black திரைப்படம் - 4 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top