Connect with us

“தடை அதை உடை” ‘தங்கலான்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!

Cinema News

“தடை அதை உடை” ‘தங்கலான்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தை வெளியிட இடைக்கால தடை போடப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் மீதான தடையை நீக்கி படத்தை குறித்த தேதியில் வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ப.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பல கலைஞர்களின் கடுமையான உழைப்பில் உருவான திரைப்படமே தங்கலான் . விறுவிறுப்பாக உருவான இப்படம் வரும் 15 ஆம் தேதி (நாளை) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி , மாளவிகா , பசுபதி , உள்ளிட்ட ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் நல்ல படியாக வெளியாக போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது .

இதனால் சற்று மனஉளைச்சலில் படக்குழு மாட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் மீதான தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .

தங்கலான் படத்தின் தயாரிப்பாளர் கடனாக வாங்கிய ₹10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன் ₹1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ₹1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top