Connect with us

மலையாள திரைத்துறையில் பூதாகரமான பாலியல் குற்றச்சாட்டுகள் – முதல் முறை மௌனம் கலைத்த மோகன்லால்..!!

Cinema News

மலையாள திரைத்துறையில் பூதாகரமான பாலியல் குற்றச்சாட்டுகள் – முதல் முறை மௌனம் கலைத்த மோகன்லால்..!!

மலையாள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமானதைத் தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் மோகன்லால் செய்தியாளர்களை அழைத்து கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

கேரளாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மோகன் லால் கூறியதாவது :

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன் . ஹேமா கமிட்டி அளித்திருந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடந்திருக்கலாம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

பதில் சொல்ல வேண்டியது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது.

திரைத்துறையில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரையுலகம் எந்த வகையிலும் பாதிப்படைய கூடாது. இந்த புகார்களுக்கு நடிகர்கள் சங்கமான ‘அம்மா’-வை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை. எனக்கு தெரிந்ததை எல்லாம் கூறிவிட்டேன். இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல.. கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. சிதறிவிடக் கூடாது என உறுதியாக இருக்கிறேன். சாட்சியங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ள நிலையில் ‘அம்மா’ மட்டுமே எப்படி பொறுப்பேற்க முடியும்? விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது எப்படி பேச முடியும்? என நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top