Connect with us

வயநாடு நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ட்விட்டர் வேதனை தெரிவித்த நடிகர் விஜய்..!!

Cinema News

வயநாடு நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ட்விட்டர் வேதனை தெரிவித்த நடிகர் விஜய்..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த துறை சம்பவிக்கும் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது .

இந்நிலையில் வயநாடு அருகே இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பல படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

கேரளாவில் உள்ள வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top