Connect with us

ரிலீஸ் நேரத்தில் தங்கலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – பதற்றத்தில் படக்குழு..!!

Cinema News

ரிலீஸ் நேரத்தில் தங்கலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – பதற்றத்தில் படக்குழு..!!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வரும் 15 ஆம் தேதி திரையரங்குள் வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவுக்கு மாபெரும் சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

ப.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பல கலைஞர்களின் கடுமையான உழைப்பில் உருவான திரைப்படமே தங்கலான் . விறுவிறுப்பாக உருவான இப்படம் வரும் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி , மாளவிகா , பசுபதி , உள்ளிட்ட ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் நல்ல படியாக வெளியாக போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த படக்குழுவுக்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் வாங்கிய கடனில் இன்னும் ₹10.35 கோடி ரூபாய் திரும்ப செலுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறிருப்பதாவது :

தங்கலான் ரிலீசுக்கு முன் 1 கோடி ருபாய் கட்ட வேண்டும் என்றும், அதன் பிறகு ரிலீஸ் செய்து கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் கூறி இருக்கிறது.

இதேபோல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் 1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தங்கலான் படக்குழு பதற்றத்தில் இருக்கும் நிலையில் இப்படம் குறித்த தேதியில் எந்த தடைகளும் இல்லாமல் வெளியாகுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top