Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்..!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசேல் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்த முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை விளையாட்டு வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

இந்நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 50 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசேல் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர் ஸ்வப்னில் குசேல் (28) புனே ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக (TTE) பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது .

நடப்பு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வென்றுள்ள 3 பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் கிடைத்துள்ளதால் தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

More in Featured

To Top