Connect with us

27 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்தில் இணையும் பிரபுதேவா, கஜோல் – இயக்குநர் யார் தெரியுமா..?

Cinema News

27 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்தில் இணையும் பிரபுதேவா, கஜோல் – இயக்குநர் யார் தெரியுமா..?

27 ஆண்டுகளுக்கு பின் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா, கஜோல் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’ இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

இப்படத்தில் பிரபு தேவா , கஜோல் , நாசர் , அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் .

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் பிரபு தேவா , கஜோல் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் விரும்பப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்த பிரபுதேவா, கஜோல் ஜோடி 27 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் இணைகின்றனர்.

தெலுங்கு இயக்குநர் சரண் தேஷ் உப்பலாபட்டி இப்படத்தை இயக்க உள்ளாராம் . இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் செட்டிலாகும் பிள்ளைகளால், பெற்றோருடன் நேரம் செலவிடுவது குறைந்து வருவதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமின்றி இப்படத்தில் ‘வாத்தி’ பட கதாநாயகி சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top