Connect with us

பாலியல் புகாரை நிரூபித்தால் ஜானியை விட்டு விலக தயார் – ஜானி மாஸ்டர் மனைவி பரபரப்பு பேட்டி..!!

Cinema News

பாலியல் புகாரை நிரூபித்தால் ஜானியை விட்டு விலக தயார் – ஜானி மாஸ்டர் மனைவி பரபரப்பு பேட்டி..!!

என் கணவர் ஜானி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை நிரூபித்தால் அவரை விட்டு விலக தயாராக உள்ளேன் என ஜானி மாஸ்டரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் ஷேக் ஜானி பாஷா. தனது புதுவிதமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் ஜானி மாஸ்டரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருந்தார் . அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது கணவர் மீதான பாலியல் புகாரை நிரூபித்தால் அவரை விட்டு பிரிய தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா தெரிவித்துள்ளார்.

இச்சமவ்வம் குறித்து பேட்டியளித்த ஆயிஷா கூறியதாவது :

பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.

பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குனராக வேலை பார்த்து வந்தார். ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார்.

மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என ஆயிஷா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அக்டோபர் 27-ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top