Connect with us

சொந்த மண்ணிலேயே இப்படியா – மோசமான சாதனை படைத்த இலங்கை அணி..!!

Featured

சொந்த மண்ணிலேயே இப்படியா – மோசமான சாதனை படைத்த இலங்கை அணி..!!

இந்திய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி மிகவும் மோசமாக ஆடி வெற்றிபெற வேண்டிய போட்டியை சமனில் முடித்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்டது . இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய கேப்டன் சூரியகுமார் ஒரு பவுண்டரி அடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

இதன்மூலம் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த மோசமான தோல்வியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

இந்நிலையில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போதைப் பொருள் கடத்தலுக்கு துணைப்போகும் அரசு அதிகாரிகள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

More in Featured

To Top