Connect with us

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

Cinema News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

சென்சேஷனல் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் . பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பிய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வாழை . சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் யுகபாரதி வரியில் தீ பாடியுள்ள இந்த பாடலை கேட்டு எப்படி உள்ளது என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Cinema News

To Top