Connect with us

தங்கலான் ஓடிடியில் வெளியாக எந்த தடையும் இல்லை – அதிரடி காட்டிய நீதிமன்றம்..!!

Cinema News

தங்கலான் ஓடிடியில் வெளியாக எந்த தடையும் இல்லை – அதிரடி காட்டிய நீதிமன்றம்..!!

விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி அசுரத்தனமான வெற்றியை பதிவு செய்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பா.ரஞ்சித்தின் அற்புதமான இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தில்லான தயாரிப்பில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்களின் அசர வைக்கும் நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் தரமாக தயாரான இருப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பியது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் 100 கோடி மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படம் இன்று வரை OTT யில் வெளியாகாமல் இருக்கும் நிலையில் இப்படத்தை OTT யில் வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு, திரைப்படம் தணிக்கை சான்று பெற்று தான் திரைப்படம் வெளியாகி இருப்பதால் தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும் - நடிகர் கமல்ஹாசன் காரசார பதிவு..!!

More in Cinema News

To Top