Connect with us

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு – பம்பரமாய் சுற்றும் அமைச்சர்கள்

Featured

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு – பம்பரமாய் சுற்றும் அமைச்சர்கள்

தமிழகத்தில் தற்போது வெளுத்து வாங்கி வரும் கன மழையின் காரணமாக நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .

இந்நிலையில் பெருமழை பெய்தாலோ பெருவெள்ளம் ஏற்பட்டாலோ அதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலியல் சீண்டல்களுக்கு ஆதாரம் தர முடியாது - நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!!

More in Featured

To Top