Connect with us

மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு..!!

Cinema News

மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரை நட்சத்திரங்கள் மற்றும் ஊடகதினருக்கு போட்டுக்காட்டப்பட்ட நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் .இப்படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வாழை .

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினருக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது.

இந்நிலையில் மாரி செல்வராஜின் அழைப்பை ஏற்று வாழை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படம் குறித்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் போட்டுள்ள அந்த பதிவில் கூறிருப்பதாவது :

உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai-ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும்.

வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காக காத்திருக்கிறேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top