Connect with us

“மனிதத்தால் ஒன்றிணைவோம்” வயநாடு மக்களுக்காக நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி..!!

Cinema News

“மனிதத்தால் ஒன்றிணைவோம்” வயநாடு மக்களுக்காக நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி..!!

கடும் மழைபொழிவால் வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல திரை நட்சத்திரங்களான விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் வயநாடு அருகே கடந்த 3 நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக பிரபல திரை நட்சத்திரங்களான விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

விக்ரம் , சூர்யா , ஜோதிகா , கார்த்தி , கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் வயநாடு மக்களுக்காக நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

More in Cinema News

To Top