Connect with us

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீத சம்பவம் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Cinema News

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீத சம்பவம் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நடிகர் விஜய் இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் சார்பில் ஏற்பட்ட விழாவில் விபரீத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் எண்ணற்ற ரசிகர்களின் தளபதியாகவும் வலம் வருபவர் தான் விஜய் அவர்கள் .

திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்து வந்த நடிகர் விஜய் தற்போது மக்கள் பணியாற்ற அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் தனது 50 ஆவது பிறந்தநாளை நடிகர் விஜய் இன்று கொண்டாடி வரும் நிலையில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என விஜய் தெரிவித்திருந்தார் .

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் . கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவுமாறு ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் நீலாங்கரையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடந்துள்ளது . அப்போது ஒருவகையான சாகசம் செய்ய முயன்ற சிறுவரின் கையில் திடீரென தீக்காயம் ஏற்பட்டுள்ளது .

பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் விஜய் கூறிருந்த நிலையில் விழாவை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் அதில் விபத்தும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top