Connect with us

ஆறுதல் வெற்றி பெறப்போவது யார்..? லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..!!

Featured

ஆறுதல் வெற்றி பெறப்போவது யார்..? லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 67 ஆவது லீக் போட்டியில் MI – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பமதுவீச முடிவு செய்துள்ளார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 9 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி ஆறுதல் வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது - காவல் ஆணையர் அருண்

More in Featured

To Top