Connect with us

தமிழிசை விமர்சனத்தால் என் மனம் புண்படாதா..? – திருமாவளவன்

Featured

தமிழிசை விமர்சனத்தால் என் மனம் புண்படாதா..? – திருமாவளவன்

தமிழிசை விமர்சனத்தால் என் மனம் புண்படாதா? என் கருத்து தமிழிசையை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :

தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. அவரது விமர்சனத்தால் என் மனம் புண்படாதா? என் கருத்து தமிழிசையை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபம் சென்றேன். குற்றா உணர்வில் திரும்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நலம் குறித்து அண்மையில் அவரது மகள் ஐஸ்வர்யா அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். பட்டியல் சமூக மக்கள் குறித்த ஆளுநரின் கரிசனத்திற்கு நன்றி. அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளதா, குறைந்துள்ளதா? என்பதை அவர் பேச வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மைதானத்தில் சம்பவம் செய்த சஞ்சு சாம்சன் - வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இமாலய இலக்கு..!!

More in Featured

To Top